ETV Bharat / international

பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவிப்பு - முடிவுக்கு வரவுள்ள போர்!

author img

By

Published : Sep 6, 2021, 10:46 AM IST

Updated : Sep 6, 2021, 2:49 PM IST

பஞ்ச்ஷீர் மாகாணத்தை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாலிபான்களை எதிர்த்துத் தீவிரமாகச் சண்டையிட்டுவந்த பஞ்ச்ஷீர் மாகாணத்தின் தேசிய எதிர்ப்பு முன்னணி, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

as-taliban-claim-control-of-panjshir-resistance-front-leader-ahmad-massoud-seeks-end-to-war
பஞ்ச்ஷீரை கைப்பற்றியதாக தாலிபான்கள் அறிவிப்பு- முடிவுக்கு வரவுள்ள போர்!

டெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் ஆகஸ்ட் 30ஆம் தேதியோடு முழுவதுமாக வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தாலிபான்கள் கைவசம் வந்த நிலையில், தாலிபான்களுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்றது பஞ்ச்ஷீர் மாகாணம்.

இந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் உள்ள இந்த மாகாணத்தை, அகமது மசூது தலைமையிலான பஞ்ச்ஷீர் போராளிகள் அரணாக இருந்து பாதுகாத்துவருகின்றனர்.

பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்ற தாலிபான்கள், பஞ்ச்ஷீர் போராளிகளுடன் கடந்த சில நாள்களாகவே சண்டையிட்டுவருகின்றனர். இச்சண்டையில், தாலிபான்கள் தரப்பில் 600 பேர் உயிரிழந்ததாகவும், பஞ்ச்ஷீர் போராளி குழுவின் தலைவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்டையை நிறுத்திவிட்டு பிரச்சினையைத் தீர்க்க தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பஞ்ச்ஷீர் போராளிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்குழுவின் தலைவர் அகமது மசூத், தாலிபான்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தில், ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவ்வாறு திரும்பப் பெற்றால், தங்களுடைய படைகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பஞ்ச்ஷீர் மோதல்: 600 தாலிபான்கள் உயிரிழப்பு!

டெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் ஆகஸ்ட் 30ஆம் தேதியோடு முழுவதுமாக வெளியேறியதைத் தொடர்ந்து, புதிய அரசை அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்நாட்டில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்கள் தாலிபான்கள் கைவசம் வந்த நிலையில், தாலிபான்களுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்றது பஞ்ச்ஷீர் மாகாணம்.

இந்துகுஷ் மலைத் தொடருக்கு அருகில் உள்ள இந்த மாகாணத்தை, அகமது மசூது தலைமையிலான பஞ்ச்ஷீர் போராளிகள் அரணாக இருந்து பாதுகாத்துவருகின்றனர்.

பஞ்ச்ஷீர் மாகாணத்தைக் கைப்பற்ற தாலிபான்கள், பஞ்ச்ஷீர் போராளிகளுடன் கடந்த சில நாள்களாகவே சண்டையிட்டுவருகின்றனர். இச்சண்டையில், தாலிபான்கள் தரப்பில் 600 பேர் உயிரிழந்ததாகவும், பஞ்ச்ஷீர் போராளி குழுவின் தலைவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சண்டையை நிறுத்திவிட்டு பிரச்சினையைத் தீர்க்க தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக பஞ்ச்ஷீர் போராளிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்குழுவின் தலைவர் அகமது மசூத், தாலிபான்கள் பஞ்ச்ஷீர் மாகாணத்தில், ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவ்வாறு திரும்பப் பெற்றால், தங்களுடைய படைகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பஞ்ச்ஷீர் மோதல்: 600 தாலிபான்கள் உயிரிழப்பு!

Last Updated : Sep 6, 2021, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.